காஞ்சிபுரம் மாவட்டம் தாயார் குளம் பகுதியில் இரவு நேரத்தில் கல்லூரி மாணவர் மீது மர்ம பொருளை வீசி தாக்குதல் நடத்திய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் வசிக்கும் கல்லூரி மாணவன் தனது நண்பர்களுடன் வீட்டிற்கு அருகாமையில் பேசிக் கொண்டிருந்தபோது, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் அங்கு சென்ற மர்ம கும்பல் அவர்கள் மீது மர்ம பொருளை வீசி தாக்கியுள்ளனர். மர்ம பொருள் வெடித்து தலையில் ரத்த காயம் ஏற்பட்டதில் மாணவன் வீட்டிற்குள் சென்று தாழிட்டுக் கொண்ட நிலையில், உடனிருந்த நண்பர்களும் தப்பிச் சென்றனர்.