திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தாழம்பள்ளம் கூட்டுச்சாலை பகுதியில் சாலையை கடக்க முயன்ற மூதாட்டி, கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உத்திரமேரூர் அடுத்த அம்மையப்பநல்லூர் கிராமத்தை சேர்ந்த மூதாட்டி செல்லம்மாள், வந்தவாசியில் உள்ள தர்காவிற்கு வந்து திரும்பிய போது இந்த விபத்து ஏற்பட்டது.