சென்னையை அடுத்த குன்றத்தூர் முருகன் கோயிலில் குறிஞ்சி பெருமுக திருவிழாவில் குறவர்கள் ஊர்வலமாக சீர் வரிசை எடுத்து சென்று கோயில் நிர்வாகத்திடம் வழங்கினர். குறிஞ்சி பெருமுக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதனையொட்டி திருநாகேஸ்வரர் கோவிலில் இருந்து சீர்வரிசையாக தேன், திணை மாவு, மா, பலா, வாழை உள்ளிட்ட பல்வேறு பழங்கள் மற்றும் பால் குடங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.