முல்லை பெரியாறு அணை பாதுகாப்பை தமிழகத்திடம் ஒப்படைப்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக, பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து தமிழகத்திற்கு கடந்த ஓராண்டுக்கு மேலாக கடும் நெருக்கடியை கேரளா கொடுத்து வருவதாக குற்றம் சாட்டினர்.