மதுரை சிந்தாமணி பகுதியில் வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை ஆயுதங்களால் போதை ஆசாமிகள் சேதப்படுத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.நள்ளிரவு 2.30 மணியளவில் சிந்தாமணி பகுதியில் உள்ள தெருக்களில் போதையில் சுற்றித்திரிந்த 4 இளைஞர்கள், வீடுகளின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள், கார், ஆட்டோக்கள் என சுமார் 50-க்கும் மேற்பட்ட வாகனங்களை ஆயுதங்களால் அடித்து உடைத்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் அளித்த புகார் அடிப்படையில், வாகனங்களை உடைத்த அதே பகுதியை சேர்ந்த 4 இளைஞர்களை கீரைத்துறை போலீசார் தேடி வருகின்றனர்.