கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஜிஎஸ்டி சாலையில் சென்ற வேன் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரை தாண்டிச் சென்று, எதிர் திசையில் உள்ள சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்ததில் அதில் பயணித்த 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். முன்னாள் சென்ற கார் திடீரென வளைந்ததால், அதன் மீது மோதாமல் இருக்க வேன் ஓட்டுநர் பிரேக் பிடித்த போது விபத்து ஏற்பட்டுள்ளது.