கொடைக்கானலில் கேரள சுற்றுலா பயணியிடம் இருந்து குரங்கு பிடுங்கிச் சென்ற செல்போனை, தமிழக இளைஞர்கள் மீட்டனர். எர்ணாகுளம் பகுதியில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்டவர்கள், கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றனர். குணா குகை பகுதியை சுற்றிப் பார்த்த போது, ஒரு பயணிடம் இருந்த செல்போனை குரங்கு பறித்துச் சென்றது. இதனையடுத்து அங்கிருந்த இளைஞர்கள் சிலர், கற்களை கொண்டு தாக்குவதை போன்று செய்கை காட்டினர். இதனால் பயந்து போன குரங்கு, கையில் இருந்த செல்போனை கீழே போட்டது.