மதுரை மாவட்டம் அரியூர்பட்டி கிராமத்தில் உள்ள மோகினிசாத்தன் கண்மாயில் மீன்பிடி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. ஊர் பெரியவர்கள் கோயிலில் வழிபாடு நடத்திவிட்டு அனுமதி அளித்தவுடன் பொதுமக்கள் ஒன்று கூடி கண்மாய்க்குள் இறங்கி பாரம்பரிய மீன்பிடி உபகரணங்களான கச்சா, ஊத்தா, கூடை உள்ளிட்டவைகளை வைத்து ஆர்வமுடன் மீன்பிடித்தனர். இதில் திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான சருகுவலையப்பட்டி, வடக்கு வலையபட்டி, கீழவளவு, சாத்தமங்கலம், கீழையூர், தனியாமங்கலம், மட்டங்கிபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் பங்கேற்றனர்.