சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த திப்பம்பட்டி நீரேற்று நிலையத்தில் இருந்து ஏரிகள் மற்றும் குளங்களுக்கு நீர் நிரப்பும் பணியை, அமைச்சர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். பின்னர், எம்.காளிப்பட்டி ஏரிக்கு தண்ணீர் வருவதை மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, எம்பி செல்வகணபதி, நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகளுடன் பார்வையிட்டு, ஏரிக்கு வரும் நீரில் மலர் தூவி அதனை வரவேற்றார். மேட்டூர், ஓமலுர், எடப்பாடி, சங்ககிரி ஆகிய 4 தாலுகாவில் உள்ள 57 ஏரிகளுக்கு நீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மூவாயிரத்து 354 ஏக்கர் நிலங்கள் பாசன வசதியும் பெறும்.இதையும் படியுங்கள் : அரசு நூற்பாலையில் இருந்து இயந்திரங்களை திருடிய கும்பல்... மக்களை மிரட்டி வழிப்பறி செய்த கும்பலின் வீடியோ காட்சி