வரும் 25ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு செல்வதை முன்னிட்டு, அமைச்சர் எ.வ.வேலு முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் சௌந்தரவல்லி தலைமையில் மாவட்ட நில அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பல்வேறு துறைகள் சார்பில் 25 ஆயிரம் பயனாளிகளுக்கு முதலமைச்சர் வழங்கப்பட உள்ள நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடர்பாக அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.