திருப்பூரில் வங்கதேசத்தை சேர்ந்தவருக்கு போலி ஆவணங்கள் மூலம் ஆதார் அட்டை எடுத்துக் கொடுத்ததாக, இடைத்தரகர் ஒருவர் கைது செய்யப்பட்டார். மாரிமுத்து என்ற அந்த நபர், திருப்பூருக்கு வேலைக்கு வரும் வெளிமாநிலங்களை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஆதார் அட்டை எடுத்துக் கொடுத்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.