மயிலாடுதுறை மாவட்டத்தில் முன்பட்ட குறுவை சாகுபடி செய்யும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. இந்த நிலையில், மயிலாடுதுறை , குத்தாலம், தரங்கம்பாடி மற்றும் சீர்காழி ஆகிய இடங்களில் உள்ள விவசாயிகள் வயலில் டிராக்டரை கொண்டு உழுதும், நாற்றங்காலை நடவு செய்தும் வருகின்றனர்.