மதுரை சித்திரை திருவிழாவின் நான்காவது நாள் விழாவை முன்னிட்டு, தங்க பல்லக்கில் எழுந்தருளிய மீனாட்சி சுந்தரேஸ்வரரை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா கடந்த 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், நாள்தோறும் வெவ்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற்று வருகிறது. அதன்படி நான்காவது நாள் விழாவை முன்னிட்டு காலை சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடனும், மீனாட்சியும் தங்கபல்லக்கில் எழுந்தருளி, முக்கிய வீதிகள் வழியாக பாகற்காய் மண்டகப்படிக்கு சென்றனர். தொடர்ந்து மாலை 6 மணிக்கு மேல் மண்டகப்படியில் இருந்து புறப்பட்டு, மீனாட்சி கோவிலை சென்றடைவார்.