உலக உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு சென்னை சிந்தாதிரிபேட்டை மே தின பூங்காவில் உள்ள மே தின நினைவுச் சின்னத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர், தொழில் வளர்ச்சிக்கு இலக்கு வைத்து செயல்படுவது போலவே, தொழிலாளர்கள் வளர்ச்சிக்கும் இலக்கு வைத்து திமுக அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது எனவும், இந்த நாடே சமத்துவபுரமாக மாற வேண்டும் என்பதுதான் திமுக அரசின் முக்கியமான நோக்கம் என தெரிவித்தார். இந்த நிகழ்வில் துணை முதலமைச்சர் உதயநிதி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.