திருச்செங்கோடு வட்டம். மல்லசமுத்திரம் ஒன்றியம் மரப்பறை கிராமம் வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சித் துறை நிர்வாகங்களை கண்டித்து ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்வீட்டு வரி ரசீது வழங்க வேண்டும்மரப்பறை கிராமத்தில் குடியிருந்து வரும் மக்களுக்கு வழங்கப்பட்ட பட்டாக்களை கிராம கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். புதிய ரேஷன் கார்டு பெற ஊராட்சியில் உள்ள குடும்பங்களுக்கு வீட்டு வரி ரசீது வழங்காமல் இருப்பதை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கிழக்கு ஒன்றிய செயலாளர் வீ.தேவராஜன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. பட்டாக்களை கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.தமிழ்மணி துவக்கி வைத்து பேசினார். எலச்சிபாளையம் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சு.சுரேஷ் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் கோ.பழனியம்மாள். ஒன்றிய குழு உறுப்பினர்கள் பூபதிமுருகன், மோகனப்பிரியா, விஜய் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சங்கத் தலைவர் பொன்னுசாமி, கிளைச் செயலாளர் சாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். Related Link எட்டாக்கனியான ஓய்வூதிய பலன்கள்?