விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி முக்குரோட்டில் உள்ள மாரியம்மன் கோயில் வைகாசி மாத திருவிழாவை முன்னிட்டு, 100க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பேருந்து நிலையம் அருகில் இருந்து பால்குடங்களை சுமந்து சென்ற பெண் பக்தர்கள், அம்மனுக்கு பாலபிஷேகம் செய்து சாமி தரிசனம் செய்தனர்.