கரூர் மாவட்டம் மேட்டு மகாதானபுரத்தில் உள்ள மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழாவை ஒட்டி பாடையில் வந்து, துடைப்பத்தால் ஒருவரை ஒருவர் அடித்து கொண்டு பக்தர்கள் விநோத நேர்த்திக்கடனை செய்து வழிப்பட்டனர். மூன்றாடுகளுக்கு பின் கடந்த மே மாதம் கொடியேற்றத்துடன் தொடங்கிய வைகாசி திருவிழா தொடங்கிய நிலையில், திரளான பக்தர்கள் நேர்த்திக்கடனை செய்து சாமி தரிசனம் செய்தனர்.