திருவள்ளூர் மாவட்டத்தில் கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த பெண்ணை காதலிப்பதாக கூறி ஏமாற்றிய இளைஞர் கைது செய்யப்பட்டார். குன்னவலம் கிராமத்தில் பாலகிருஷ்ணன் என்பவருக்கும் காவியா என்ற பெண்ணிற்கும் 2013 ஆண்டு திருமணமான நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், காவியாவுடன் நெருங்கி பழகிய ரவீந்திரன் என்பவர், அவரை கர்ப்பமாக்கி விட்டு வேறு பெண்ணை மணந்ததாக கூறப்படுகிறது. மேலும், வயிற்றில் வளரும் குழந்தைக்கும் தனக்கும் சம்பந்தமில்லை எனக் கூறி காவியாவை நிராகரித்துள்ளார்.