மதுரை மாவட்டம் பழங்காநத்தம் அருகே கட்டப்பட்ட மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்த நிலையில், அந்த நிகழ்ச்சியை மேயர் இந்திராணி புறக்கணித்ததால் திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன்.வசந்த் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக கூறி அவரை கட்சியில் இருந்து திமுக தலைமை அதிரடியாக நீக்கியது. இதன் காரணமாக ,மேம்பால திறப்பு விழா நிகழ்ச்சியை மேயர் இந்திராணி புறக்கணித்ததாக கூறப்படுகிறது.