தமிழ்நாடு முழுவதும் உள்ள கோவில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த நிபந்தனையுடன் உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது. நிகழ்ச்சி நடைபெறும் உள்ளாட்சி அமைப்புகளின் செயலாளர்களிடம் 25 ஆயிரம் ரூபாயை மனுதாரர்கள் செலுத்த வேண்டும் எனவும் நிபந்தனையை விதித்துள்ளது.