திருமணம் மோசடி வழக்கு தொடர்பாக மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிறிஸில்டா ஆகிய இருவரும் வரும் 29ஆம் தேதி மாநில மகளிர் ஆணையத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாதம்பட்டி ரங்கராஜ் திருமண மோசடி செய்ததாக ஜாய் கிறிஸில்டா என்பவர் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் புகாரளித்தார். இரு தரப்பினரையும் நேரில் ஆஜராக ஆணையம் சம்மன் அனுப்பிய நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் தனது மனைவியுடனும், ஜாய் கிறிஸில்டா தனது வழக்கறிஞருடன் ஆஜராகினர். இருதரப்பினரும் வாதங்களை முன் வைத்த நிலையில், விசாரணை மேற்கொண்ட ஆணையம் வரும் 29ஆம் தேதி ஆஜராக உத்தரவிட்டுள்ளது.