கன்னியாகுமரி மாவட்டம் புலியூர்குறிச்சியில் கட்டுப்பாட்டை இழந்த லாரி, எதிரே வந்த கார் மற்றும் இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில், பைக்கில் சென்ற நபர் உடல் நசுங்கி உயிரிழந்தார். நாகர்கோவிலில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி சென்ற லாரி, புலியூர்குறிச்சி நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கார் மற்றும் இருசக்கர வாகனம் மீது மோதியது.