நாகை மாவட்டம், பாப்பாகோவில் ஊராட்சியில் கடந்த 20 நாட்களாக குடிநீர் வராததால் பொதுமக்கள் ஆத்திரமடைந்து நாகை- தூத்துக்குடி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேச்சுவார்த்தைக்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலரை உப்பு நீரை குடிக்க வைத்து நல்ல குடிநீரை வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.