மதுரை ஒத்தக்கடையில் மாநில அளவிலான சுய உதவி குழுக்களுக்கு 2 ஆயிரத்து 874 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடன் உதவிகள் வழங்கும் நலத்திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.வருவாய்த்துறையின் மூலம் 12 ஆயிரத்து 233 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள், 25 ஆயிரம் பேருக்கு 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவியையும் அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்.இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், பல்வேறு மகளிர் நலத்திட்டங்களால் பெண்கள் தலை நிமிர்ந்து நிற்கின்றனர் என பேசினர்.