திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே குச்சி ஐஸில் பல்லி இறந்து கிடந்த நிலையில், அதனை சாப்பிட்ட இரண்டு குழந்தைகள் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெளியாகரம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன், சிவசக்தி ஐஸ் கம்பெனியில் மொத்தமாக குச்சி ஐஸ்களை வாங்கி, சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் விற்பனை செய்து வந்தார். இந்நிலையில் குச்சி ஐஸில் பல்லி இருந்தது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.