செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே இரும்பு லோடு ஏற்றிவந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியபோது, சாலையோரம் நின்றிருந்த 3 பேர் நூலிழையில் உயிர் தப்பித்தனர். இந்த லாரி முன்னால் சென்ற லாரியை முந்த முற்பட்ட போது தறிகெட்டு ஒடியதுடன் அந்த லாரி மீதும் மோதி விபத்துக்குள்ளானது. சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தொழுப்பேடு அருகே நடந்த இந்த விபத்தின் பதைபதைக்கும் சிசிடிவி காட்சியை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.