ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் லட்ச தீப தவண உற்சவ திருவிழாவை முன்னிட்டு, ஏகாம்பரநாதருக்கு சுமார் ஒரு டன் எடையிலான மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. பங்குனி மாத பிரம்மோற்சவ தேர்த் திருவிழாவை முன்னிட்டு, காலையில் காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரநாதர் சுவாமிகளுக்கு பல்வேறு வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டு, இரவு ஏகாம்பரநாதர் திருவீதி உலா நடைபெற்றது.