காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள ஏரிக்கரை மற்றும் மதகுகள் சேதமடைந்து தண்ணீர் வீணாக செல்வதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். புத்தளி கிராமத்தில் உள்ள ஏரியின் மதகு ஷட்டர் பழுதடைந்தும், அழிசூர் கிராமத்தில் ஏரிக்கரை உடைந்தும் தண்ணீர் வீணாகி செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகள் கூறுகின்றனர்.