சேலம் சங்ககிரி அருகே கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கூலிப்படையை சேர்ந்த இருவர் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டம் பாய்ந்தது. கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தினரை பிரிந்து சங்ககிரியில் நியூட்ரிசன் சென்டர் நடத்தி வந்த பக்காலியூர் அருவங்காடு பகுதியை சேர்ந்த ராஜேந்திரனை, மனைவியும், மகனும் கூலிப்படையை ஏவி கொலை செய்தனர். இந்த வழக்கில், கூலிப்படையை சேர்ந்த லோகேஷ், சசிகுமார் மீது குண்டாஸ் பாய்ந்தது.