வேலூர் அருகே புதுவசூர் பகுதியில் உள்ள தீர்த்தகிரி மலையின் மேல் அமைக்கப்பட்ட 92 அடி உயர முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. உலகின் மூன்றாவது மிக உயரமானது எனக் கூறப்படும் முருகன் சிலையின் மீது ட்ரோன் மூலம் புனித நீர் ஊற்றப்பட்டது. அரோகரா அரோகரா என்ற பக்தி கோஷத்துடன் ஏராளமான பக்தர்கள் கும்பாபிஷேகத்தை தரிசித்தனர்.