நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் காய்கறி கண்காட்சிக்கு தயாராகி வரும் நேரு பூங்காவில், கோடை சீசனுக்காக நடவு செய்யப்பட்ட பலவகையான பூக்கள் பூத்து குலுங்கி வருகிறது. ஆண்டுதோறும் கோடை சீசனுக்கு நீலகிரி வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க, மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத் துறை சார்பில் காய்கறி கண்காட்சி, ரோஜா கண்காட்சி, மலர் கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி, பழக்கண்காட்சி, மலை பயிர்கள் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் முதல் நிகழ்ச்சியான காய்கறி கண்காட்சி கோத்தகிரி நேரு பூங்காவில் வரும் மே 3, 4 ஆம் தேதிகளில் 2 நாட்களுக்கு நடைபெறுகிறது. இதற்காக அரங்கு அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு வகையான பூக்கள் பூத்து குலுங்கி ரம்மியமாக காட்சியளிக்கின்றன.