மதுரை சித்திரை திருவிழாவில், மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக அழகர்மலையில் இருந்து புறப்பட்ட கள்ளழகர், கண்டாங்கி பட்டுடுத்தி தங்க பல்லக்கில் மதுரை மாநகரை வந்தடைந்தார். வழிநெடுக உள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளி, மதுரை மாநகரின் எல்லையான மூன்று மாவடி பகுதிக்கு வந்தடைந்த கள்ளழகரை, பக்தர்கள் கோவிந்தா கோஷத்துடன் ஆடிப்பாடி எதிர்சேவை செய்து வரவேற்றனர். பெண் பக்தர்கள் செம்பில் சர்க்கரை நிரப்பி, சூடம் ஏற்றி அழகரை வரவேற்றனர். மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம் நாளை நடைபெற உள்ளது.