சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த குப்பூர் பகுதியில் உள்ள காளியம்மன் கோயில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். இதனையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட நிலையில், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபாடு நடத்தினர்.