news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews குடமுழுக்கு விழாவிற்கு சீர்வரிசை கொண்டு வந்த இஸ்லாமியர்கள்
tv

Also Watch

tv

Read this

குடமுழுக்கு விழாவிற்கு சீர்வரிசை கொண்டு வந்த இஸ்லாமியர்கள்

நாகப்பட்டினம்

37

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
hindu muslim

வேளாங்கண்ணியில், மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக, கோயில் கும்பாபிஷேக விழாவிற்காக, சீர்வரிசை எடுத்து வந்த இஸ்லாமியர்கள், நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ரஜதகிரீஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா, 20 ஆண்டுக்குப் பின் விமர்சையாக நடைபெற்றது.

இந்த விழாவில், இந்து - இஸ்லாமியர்களின் மத நல்லிணக்க ஒற்றுமையை வலுப்படுத்தும் விதமாக, ரஜதகிரீஸ்வரர் கோயிலுக்கு மஞ்சள், குங்குமம், தேங்காய், வாழைப்பழம், பட்டுப்புடவை உள்ளிட்ட பல்வேறு வகையான மங்கல பொருட்களை வேளாங்கண்ணி முகமதியர் ஜமாத்தை சேர்ந்த முஸ்லிம்கள் பள்ளிவாசலில் இருந்து ரஜதகிரீஸ்வரர் கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

இஸ்லாமியர்களை இன்முகத்துடன் வரவேற்ற ரஜதகிரீஸ்வரர் ஆலய நிர்வாகிகள், அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் யாகசால பூஜைக்கு சீர்வரிசையாக கொண்டு வரப்பட்ட நவதானியம் உள்ளிட்ட 16 வகையான மங்கல பொருட்களை இஸ்லாமியர்கள் ஆலய நிர்வாகிகளிடம் வழங்கினர்.

அதன் பிறகு கோலாகலமாக குடமுழுக்கு விழா நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
13 hrs 58 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau