திருவண்ணாமலை மாவட்டம் லாடவரம் அருகே விவசாயி ஒருவர் கழுத்தறுக்கப்பட்டு மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. கணேசபுரம் கிராமத்தைச் சேர்ந்த சம்பத் என்பவர் நேற்றிரவு 10 மணிக்கு வெளியே சென்றுவிட்டு வருவதாக தனது தாயிடம் கூறியுள்ளார். இதனையடுத்து, காலை நேரத்தில் அருகில் உள்ள தேவராஜ் என்பவரது மனைவி வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது சம்பத் கழுத்தறுக்கப்பட்டு உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் கொலையா? அல்லது வேறுஏதேனும் காரணமாக என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.