இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடியில் கொத்து கொத்தாக கரை ஒதுங்கிய சோப்பு, ஷாம்புகளை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். முகந்தராயர்சத்திரம் பகுதியில் இன்ஜின் பழுது காரணமாக நாட்டுப்படகு கரை ஒதுங்கி நின்றதாக அதிலிருந்த நபர்கள் கூறிய நிலையில், அவர்களை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். பழுது காரணமாக படகு கரை ஒதுங்கி நின்றதா, இலங்கைக்கு பொருட்களை கடத்திச் சென்றார்களா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.