ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் கந்து வட்டிக்கு கொடுத்த பணத்தை வசூலிக்கும் போது பெண்களிடம் ஆபாசமாக பேசிய அமமுக முன்னாள் மாவட்ட செயலாளரை போலீசார் கைது செய்தனர். கணபதிபாளையம் பகுதியை சேர்ந்த யுவராஜ், அமமுகவின் அம்மா பேரவை முன்னாள் மாவட்ட செயலாளராக இருந்தார். இவர் அப்பகுதியில் கந்து வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கி வரும் நிலையில், பணம் கொடுக்க தாமதமானால் ஆபாசமாக பேசி மிரட்டல் விடுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரை தொடர்ந்து யுவராஜை போலீசார் கைது செய்தனர்.