சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கு சென்று கொண்டிருந்த இண்டிகோ விமானம், இயந்திர கோளாறு காரணமாக அவசரமாக மீண்டும் சென்னையில் தரையிறங்கியது. ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு மேல் நடுவானில் சென்று கொண்டிருந்த போது, இயந்திர கோளாறு ஏற்பட்டதால் விமானம் சென்னைக்கு திருப்பி விடப்பட்டது. இயந்திர கோளாறு உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதால், விமானத்தில் பயணித்த 165 பேர் உயிர் தப்பினர். பின்னர் அவர்கள் மாற்று விமானம் மூலம் ஹைதராபாத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இதையும் படியுங்கள் : ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பும் பணி தொடக்கம்... பணியை தொடங்கி வைத்த அமைச்சர் ராஜேந்திரன்