சென்னையில், வார தொடக்க முதல்நாளான இன்று நவம்பர் 3ஆம் தேதி, ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.320 அதிகரித்தது. ஒரு சவரன் ரூ.90,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11.350க்கு விற்பனை ஆகிறது.சர்வதேச வர்த்தக நிலவரங்களால், நம் நாட்டில் தங்கத்தின் விலையில் அதிக ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. தமிழகத்தில், கடந்த சனிக்கிழமை நவம்பர் ஒன்றாம் தேதி, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை, ஒரு சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.90,480க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ரூ.11,310க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.166க்கு விற்பனை ஆனது. இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை, ஒரு சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.90,800க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11.350க்கு விற்பனை ஆகிறது. வார தொடக்க முதல்நாளான இன்று காலை, தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்வை கண்டுள்ளது.