முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சீரிய நடவடிக்கையின் காரணமாக உயர்கல்வி படிக்கும் மாணவிகளின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். திருவண்ணாமலையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பேசிய அவர்,அரசு கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தால் இடை நிற்றல் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கூறினார்.