திருச்சி ரயில் நிலையத்தில் இட்லிக்கு கூடுதலாக 8 ரூபாய் வசூல் செய்த ரயில்வே கேட்டரிங் நிறுவனத்திற்கு 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து விழுப்புரம் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரத்தை சேர்ந்த ஆரோக்கியசாமி, வைகை அதிவேக விரைவு ரயிலில் சென்ற போது வசந்தம் கேட்டரிங் சார்பில் விற்பனை செய்யப்பட்ட இட்லிக்கு கூடுதலாக 8 ரூபாய் வசூல் செய்ததாக கூறி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த குறைதீர் ஆணைய தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் வசந்தம் கேட்டரிங் நிறுவனத்திற்கு 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.