கடந்த 2001ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே விஷ சாராயம் அருந்தி 53 பேர் உயிரிழந்த சம்பவத்தில் 23 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 3ஆவது குற்றவாளி கைது செய்யப்பட்டான். நத்தம், ஒறையூர், அங்குச்செட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் கடந்த 2001ஆம் ஆண்டு கள்ளச்சாரயம் விற்பனை செய்த வழக்கில், 22 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், மேலும் 5 பேரை தேடி வந்தனர். இவ்வழக்கு பல வருடங்களை கடந்த நிலையில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில் 3 வழக்கிலும் மூன்றாவது குற்றவாளியாக கருதப்பட்ட வாசுதேவநல்லூரை சேர்ந்த மாடசாமியை போலீசார் கைது செய்தனர்.