சென்னை விமான நிலையத்தில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடைபெறுவதாக புகார் எழுத்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் வெளிநாட்டு கரன்சிகளை மாற்றிக்கொள்ள விமானநிலையத்தில் பல இடங்களில் கரன்சி எக்ஸ்சேஞ் ஸ்டால் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிலர், வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளை மறித்து ஸ்டால்களில் தருவதை விட அதிக பணம் தருவதாக கூறி மிக குறைவான பணத்தை கொடுத்து ஏமாற்றிவிட்டு தப்பி செல்வதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து விமானநிலையத்தில் பயணிகள் ஏமாற்றப்படுவதை அதிகாரிகள் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.