உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி, தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஐஐடி குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். காசி விஸ்வநாதர் கோயிலில் கடந்த 7-ம் தேதி குடமுழுக்கு விழா விமரிசையாக நடைபெற்ற நிலையில், கோயில் நிர்வாகத்தின் மீது மோசடி புகார் எழுந்தது. இந்த நிலையில், கோயிலின் உறுதித்தன்மை மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது குறித்து ஆய்வு மேற்கொண்ட ஐஐடி குழுவினர், கோயில் அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தனர். கோயில் புனரமைப்பு பணிகள் முற்றிலும் நிறைவு அடைந்ததாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கோயில் வளாகத்தில் பணிகள் சரிவர முடிக்காததை ஆய்வில் கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.