தன் மீது ஏதேனும் கோபமிருந்தால், தன்னை மன்னித்து விடும்படி பாமக நிறுவனர் ராமதாசிடம் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் பகிரங்க மன்னிப்பு கோரினார். மணவாள நகரில் நடைபெற்ற திருவள்ளூர் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அவர், தந்தையாக நீங்கள் ஆணையிடுங்கள், மகனாக எதையும் செய்து முடிக்கிறேன் என்று தெரிவித்தார். ராமதாஸ் மாநில தலைவர் அல்ல தேசிய தலைவர் என்று பேசிய அவர், ராமதாஸ் அவர்கள் 100 ஆண்டுகள் உடல் நலத்துடன் மன நிம்மதியுடன் வாழ வேண்டும் என விரும்புவதாக கூறினார்