எடப்பாடியார் உத்தரவிட்டால் பகல்ஹாம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க ஆயிரம் இளைஞர்களுடன் யுத்த களத்திற்கு செல்ல தயாராக உள்ளதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் செய்தியாளர்களை சந்தித்த, அவர், 10 நாட்கள் இளைஞர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்து போர்க்களத்திற்கு செல்ல தயார் என கூறியுள்ளார்.