நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சக மாணவனால் அடித்து கொல்லப்பட்டதாக கூறப்படும் மாணவனின் குடும்பத்துக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ராசிபுரம் அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்த கவின்ராஜ், சக மாணவரால் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், இழப்பீடு, அரசு வேலை, வீட்டுமனை பட்டா கோரி அவரது குடும்பத்தினர் உடலை வாங்க மறுத்தனர்.