புதுச்சேரியில் தலைப் பொங்கலை கொண்டாட வந்த மருமகனுக்கு, 470 வகையான உணவுகளை பரிமாறி பெண் வீட்டார் ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். ஆந்திராவுக்கு அருகில் உள்ள புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்தில் வர்த்தக சங்க செயல் தலைவரான சத்யபாஸ்கர் வெங்கடேஸ்வர், புதிதாக திருமணமான தனது மகளுக்கும், மருமகனுக்கும் 470 வகையான உணவுகளுடன் தடபுடலாக சங்கராந்தி விருந்து வைத்துள்ளார்.