கரூர் மேட்டு தெருவில் உள்ள சாய்பாபா கோவிலில் புனித பாதுகை ஊர்வலம் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. பேருந்து நிலையம் ரவுண்டானா விலிருந்து மேள தாளங்கள் முழங்க பெண்கள் கோலாட்டம் ஆடி ஊர்வலமாக நகரின் முக்கிய வீதிகளில் சென்றனர். பின்னர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.