மயிலாடுதுறை அருகே சூறைக்காற்றுடன் பெய்த கனமழையில் முறிந்து விழுந்த மின்கம்பங்களை 14 நாட்களாகியும் சரி செய்யாத மின்வாரியத்தினர், சீரமைக்க பணம் கேட்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர். திருமணஞ்சேரி கிராமத்தில் 12 மின்கம்பங்கள் முறிந்து விழுந்த நிலையில், மின்வாரியத்தின் அலட்சியத்தால் குறுவை சாகுபடி பணிகளை தொடங்க முடியவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.